Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தேரில் பவனி வந்த சென்னாமலை ... நல்லாட்டூர் கோவிலில் முருகன் திருக்கல்யாணம் நல்லாட்டூர் கோவிலில் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காய்,கனி, பூக்களால் அலங்காரம்; சென்னியாண்டவர் கோவில் வந்த பக்தர்கள் வியப்பு
எழுத்தின் அளவு:
காய்,கனி, பூக்களால் அலங்காரம்; சென்னியாண்டவர் கோவில் வந்த பக்தர்கள் வியப்பு

பதிவு செய்த நாள்

11 பிப்
2025
05:02

கருமத்தம்பட்டி; ஆறு டன் காய்கள், கனிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சென்னியாண்டவர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்படைந்தனர்.


கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு தைப்பூசத்தை ஒட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, தைப்பூச அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று தேரோட்டம் நடந்தது. தைப்பூச விழாவை ஒட்டி, கோவில் முழுக்க, காய்கள், கனிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழைத்தார், இளநீர், கரும்பு மற்றும் அனைத்து விதமான காய்கள், பழங்கள், பூக்களை கொண்டு, பிரகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், அலங்காரத்தை கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர். அலங்கார பணிகளை செய்த சிவக்குமார் கூறுகையில்," கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கோவில் மற்றும் தேருக்கு பலவகையான காய், கனிகள் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரம் செய்துள்ளோம். பல பணியாளர்களை கொண்டு, எட்டு மணி நேரத்துக்கும் மேலாக அலங்காரம் செய்யும் பணி நடந்தது," என்றார்.  அலங்கரிக்கப்பட்ட காய்கள், மறு பூஜையன்று அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படும். பழங்கள், பூக்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும், என, கோவில் நிர்வாகிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar