Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பத்தூரில் கவிராஜ பண்டிதர் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மசாணியம்மன் கோவில் மயான பூஜையில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஆனைமலை மசாணியம்மன் கோவில் மயான பூஜையில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
05:02

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவை முன்னிட்டு மயான பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது. மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகர், மயான அருளாளி அருண் உள்ளிட்ட அருளாளிகள், அம்மனின் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் கோவிலிலிருந்து, ஆழியாற்றங்கரைக்கு சென்றனர். மயான பூஜைக்காக  மண்ணால், மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில், நீராடி தீர்த்தம் எடுத்து வந்தார். நள்ளிரவு, 2:00 மணிக்கு பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், அருளாளி எடுத்து வந்த தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர்.  அதிகாலை, 2:50 மணிக்கு  அருளாளிக்கு அருள் வந்து, அம்மனின் திருஉருவத்தில் இருந்து எலும்புத்துண்டை எடுத்து வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். மயான பூஜை அதிகாலை, 3:30 மணிக்கு முடிந்தது. பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று காலை 7:00 மணிக்கு உப்பாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. பின் மகா பூஜை நடைபெற்றது. நாளை காலை, குண்டம் கட்டுதல், மாலையில் சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (14ம்தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar