திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2025 10:02
சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில் 32ம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சுவாமி, அம்மனை கோயிலில் இருந்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், அபிஷேக தீபாராதனை செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. பின் மின்விளக்கு அலங்கார சப்பத்தில் ஏலவார் குழலியம்மன், ஏடகநாதார் சுவாமி பிரம்ம தீர்த்த தெப்பத்தில் எழுந்தருளி, ரத வீதிகளில் அருள்பாலித்தனர். ஏராளமான பெண் பக்தர்கள் தெப்பத்தில் விளக்கேற்றி, மலர் துாவி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சேவுகன் செட்டொயார், நிர்வாக அதிகாரி சரவணன், விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.