Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் ... மாசி வெள்ளி; விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மாசி வெள்ளி; விளமல் பதஞ்சலி மனோகரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்த 16ம் நூற்றாண்டு கல் மண்டபம்; மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
சேதமடைந்த  16ம் நூற்றாண்டு கல் மண்டபம்; மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

21 பிப்
2025
05:02

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே சிற்பங்கள் நிறைந்த கல் மண்டபம் சிதிலமடைந்து கிடப்பதை மேம்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி சிவன் கோயில் பின் பகுதியில் ரோடு ஓரத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான கல் மண்டபம் சிதிலமடைந்து கிடக்கிறது. கல் மண்டபத்தில் உள்ள துாண்களில் பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கல்மண்டபம் எதிரே தெப்பக்குளம் உள்ளது. முற்காலத்தில் அருகில் உள்ள கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் போது சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளத்தில் நீராடி இந்த கல் மண்டபத்தில் தங்கி பூஜை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்துடன் இந்த வழியில் செல்லும் மக்கள் தங்குவதற்குரிய அன்னச்சத்திரமாகவும், இளைப்பாறவும், தியான மண்டபமாகவும் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுச் சான்றுகளாக கருதப்படும் கல் மண்டபங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இது போன்ற கல்வெட்டுகள் நாயக்கர்கள் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வதற்கு இடையில் இது போன்ற கல் மண்டபங்களில் தங்கி இளைப்பாறி செல்வதற்கு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பெரும்பாலான கல் மண்டபங்கள் சிதைந்து கிடக்கின்றன. பாலையம்பட்டி அருகில் உள்ள கல் மண்டபம் நாயக்கர் கால ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். இது 16 ம் நூற்றாண்டை சார்ந்தது. இது போன்ற கல் மண்டபங்களை பாதுகாக்கவில்லை என்றால் கடந்த கால வரலாற்றை நாம் இழந்து விடுவோம் என, வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று வரை 59.31 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ராமரின் தெய்வீக தரிசனத்திற்காக இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகனை தரிசிக்க, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில்  வருடாந்திர மகாசிவராத்திரி ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar