Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்காரு அடிகளார் பிறந்த நாள் ... தஞ்சை பெரிய கோவிலில்  சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தம் : மே7ல் தேரோட்டம் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

03 மார்
2025
10:03

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. 5ம் நாள் விழாவாக நேற்று தீமிதி விழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரம் செய்தனர். பகல் 2.30 மணிக்கு அக்னி குளத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை கோவில் முன்பு அமைத்திருந்த தீக்குண்டம் முன்பு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது காப்பணிந்து விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி, ஆகாய மார்கமாக அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். 3.15 மணிக்கு சேலம் மாவட்டம், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமானந்தம் சுவாமிகள் தீக்குண்டம் இறங்கி தீமிதிப்பதை துவக்கி வைத்தார். தொடர்ந்து கோவில் பூசாரிகளும், தமிழகம் முழுவதும் இருந்து காப்பு அணிந்து விரதமிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு 9 மணி வரை தீமிதித்தனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலை உதவி அணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி.சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசாரும், மாவட்ட தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ... மேலும்
 
temple news
சென்னை; 500 ஆண்டுகளுக்கு பிறகு குன்றத்தூர் முருகன் கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா முதல் நாள் மாலை வெள்ளி ஹம்ச வாகனத்தில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar