பதிவு செய்த நாள்
03
மார்
2025
04:03
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா பந்தக்கால் நடப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திபெற்றது வேதகிரீஸ்வரர் கோவில். நான்கு வேதங்களே மலைக்குன்றுகளாக வீற்று, குன்றின் உச்சியில், வேதகிரீஸ்வரர் சுயம்பு மலைகொழுந்தாக வீற்று, கோவில் கொண்டுள்ளார். அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன், அருகில் உள்ள பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் வீற்றுள்ளார். கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்விழா, மே மாதம் முதல் வாரம் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, கோவிலில் நேற்று காலை, வேதமந்திரங்கள் முழங்கி வழிபட்டு, பந்தக்கால் நடப்பட்டது. செயல் அலுவலர் புவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.