Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் மாரியம்மன் கோயிலில் காப்பு ... காரமடை அரங்கநாதர் கோவிலில் நாளை கொடியேற்றம் காரமடை அரங்கநாதர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையின் காவல் தெய்வம்; கோனியம்மன் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கோவையின் காவல் தெய்வம்; கோனியம்மன் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 மார்
2025
03:03

கோவை; கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று கோலாகமாக நடைபெற்றது. 


கோவையின் காவல்தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவில், தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த 10ம் தேதி, தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 18ம் தேதி, பூச்சாட்டு விழாவும் நடந்தது. பிப்.,24 அன்று கிராமசாந்தி நிகழ்ச்சியும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. அன்றாடம் மேளதாளங்கள் முழங்க, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்கம்பத்தில், அக்னிச்சாட்டு நிகழ்ச்சியும், விநாயகர், சூலத்தேவர், அம்மன் கோவிலில் இருந்து சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. பிப்.,26 முதல், புலி, கிளி, சிம்ம, அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று இரவு அம்மனுக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. வழக்கமான வைதீக முறைப்படி கலாசாரமும் பண்பாடும் மாறாமல், திருக்கல்யாண வைபவம் நடந்தது. பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், மங்கல தாம்பூலம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் இன்று பகல் 2:05 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்தனர். ராஜவீதி தேர்நிலைத்திடலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி தேர்நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், அன்னூர். மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை நகர வீதிகளில் தேர் பவனி வரும் காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.தேரின் உள்ளே நடுநாயகமாக கோரியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று (மார்ச் 5) காலை ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை மற்றும் சஷ்டி விரதமாகும். இன்று கார்த்திகை, ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூரில் மாசி பிரம்மோத்சவ பெருவிழாவில் முதல் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar