விழாவையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 7ம் தேதி காலை 7:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், 108 சங்கு ஸ்தாபனம், முத்தாலம்மன் மூலமந்திர ேஹாமம் நடந்தது. 10:00 மணிக்கு கோவிலில் இருந்து பெண்கள் பால்குட ஊர்வலம் சென்று, 11:00 மணிக்கு அம்மனுக்கு பால் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், உலக நன்மை வேண்டியும், அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று நலமுடன் வாழ வேண்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுளை, பாகூர் நவதேவஸ்தான கோவில் நிர்வாக அதிகாரி பச்சையப்பன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.