Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அன்ன வாகனத்தில் காரமடை அரங்கநாத ... தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா; தீர்த்திக்குடம் ஊர்வலம் தேவி கருமாரியம்மன் கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் தேரோட்டம் நிறைவு; அம்மனுக்கு சீர் வரிசை செய்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் தேரோட்டம் நிறைவு; அம்மனுக்கு சீர் வரிசை செய்த முஸ்லிம்கள்

பதிவு செய்த நாள்

08 மார்
2025
11:03

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், முஸ்லிம்கள் அம்மனுக்கு சீர் வரிசை செய்தனர்.


பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, வெங்கட்ரமணன் வீதியில் நேற்றுமுன்தினம் நிலைநிறுத்தப்பட்ட தேர், இரவு வடம் பிடித்து சத்திரம் வீதிக்கு சென்றது. பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் சார்பாக, இஸ்லாமியர்கள், அம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு சென்று, கோவில் பரம்பரை அறங்காவலர் மாணிக்கம், அவரது மகன் ஹரிஹரசுதன், கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு ஜூஸ் வழங்கப்பட்டது.பெரிய பள்ளி நிர்வாகிகள் தலைவர் ஹாஜி ஜாகீர் உசேன், செயலாளர் ஹாஜி அன்வர் பாஷா, பொருளாளர் முஸ்தாக் அகமது, நகராட்சி கவுன்சிலர் சாந்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நல்விடியல் சமூக நல அறக்கட்டளை, பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மதநல்லிணக்க குளிர்பான விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், விழாவை துவக்கி வைத்தார். போலீசார், அமைப்பினர், பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. சத்திரம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில், நேற்று இரவு அம்மனுக்கும், விநாயக பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. அதன்பின், சந்திரம்வீதி, மார்க்கெட் ரோடு வழியாக கோவில் வளாகத்தில் தேரோட்டம் நிறைவடைந்தது. அதன்பின், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar