Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி; ... சோழவந்தான் அழகருக்கு தயாராகுது தங்கக்குதிரை சோழவந்தான் அழகருக்கு தயாராகுது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு கிள்ளையில் முஸ்லீம்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு கிள்ளையில் முஸ்லீம்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

15 மார்
2025
10:03

கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி வரவேற்பு அளித்தனர்.

சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையில், நேற்று நடந்த மாசி மகத்திருவிழாவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு நேற்று தீர்த்தவாரி நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பூவராக சுவாமி கிள்ளை தைக்கால் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளினார். நேற்று காலை அங்கு பூவராக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதனைதொடர்ந்து, கிள்ளை தைக்கால் சையத் ஷா ரஹமத்துல்லா தர்காவில், பாரம்பரிய முறைப்படி பூவராக சுவாமிக்கு, டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில், இந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், 5 படி அரிசி, 501 ரூபாய், பட்டு சாத்தி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லீம்கள் வரவேற்பு அளித்தனர்.

பூவராக சுவாமி கோவில் ஆச்சாரியார்கள் தர்காவிற்கு சென்று, மாலை, நாட்டு சக்கரை, வத்தி உள்ளிட்டவைகளை டிரஸ்டி சையத் சக்காப்பிடம் வழங்கி, உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் ரவிந்திரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். தர்கா டிரஸ்டி சையத் சக்காப் கூறுகையில், பூவராக சுவாமி மாசி மகத்திற்கு வரும்போது, முன்னோர்கள் வழக்கப்படி 7 தலை முறையாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

அதுபோல், அவர்கள் கொடுக்கும் நாட்டு சர்க்கரையை வைத்து பாத்தியா ஓதி பிரசாதம் வழங்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 
temple news
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar