முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2025 12:03
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு விடுமுறை நாளான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். கடந்த மார்ச் 11 கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.மார்ச் 19 ஆம் தேதி முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 20 இரவு அம்மன் திருவீதி உலாவும் 21 ஆம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலே நள்ளிரவில் பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலில் இருந்து பால்குடம் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் முத்து மாரியம்மன் கோவில் வரை நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.