பெரியகுளம்; பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.
பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாதசாமி கோயிலின் உபகோயிலான பகவதியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இக்கோயிலில் மார்ச் 4ல் சாட்டப்பட்டது. மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 19) வரை பத்து நாட்கள் திருவிழா நடந்தது. இன்று முக்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், காவடி எடுத்தும், பகவதியம்மன், மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன், மீனாட்சியம்மன் உட்பட அம்மன், சுவாமி அலங்காரமிட்டு பக்தர்கள் சென்றது அனைவரையும் கவர்ந்தது. மார்ச் 25ல் மறுபூஜை நடக்கிறது.