Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி முத்துமாரியம்மன் ... சி.இ.ஓ., பதவியை உதறி விட்டு துறவறம்; குகையில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி சி.இ.ஓ., பதவியை உதறி விட்டு துறவறம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 மார்
2025
06:03

திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும், திருப்புவனத்தை சேர்ந்தவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பங்குனி திருவிழா நடைபெறும் நாட்களில் அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் நேற்று இரவு 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருத்தது. கொடி மரத்திற்கு சந்தனம்,பால், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்ட பின் பலிபீடத்துடன் சாமரம், சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கொடி மரத்திற்கு பக்தர்கள் நேர்த்திகடனாக மாலைகளை வழங்கினர். ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தன்னாயிரம் உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர். கொடியேற்றத்திற்கான பூஜைகளை செந்தில்பட்டர், விக்னேஷ் பட்டர், விவேக் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள், 28ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்; கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலைஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி தசரா நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆயுத பூஜை  ... மேலும்
 
temple news
எரியோடு; எரியோடு அருகே இ.சித்தூர் நல்லமநாயக்கன்பட்டியில் இருக்கும் அய்யனார் கோயிலில் புரட்டாசி 3ம் ... மேலும்
 
temple news
மேலூர்; வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar