திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் வாங்கிய பஞ்சாங்கம் படியே சனிப்பெயர்ச்சி; கோவில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2025 10:03
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 2026ம் ஆண்டில் வாங்கிய பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஸ்ரீசனீஸ்வர பகவான் தனிசன்னத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார். இக்கோவில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி தேதிகள் குறித்து நேற்று கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்.. பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturns transit) தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ம் தேதி அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளனர். இது தொடர்பாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி. 2026ஆம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.பக்தர்கள். ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் தனி அதிகாரி உத்தரவுப்படி கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.