பதிவு செய்த நாள்
29
மார்
2025
10:03
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 11 ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள சகுன விநாயகரிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, நேற்று 28 ம் தேதி மாலை தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சிறிய தேரான விநாயகர் தேருக்கும் அதனை தொடர்ந்து, பெரிய தேரான அம்மன் தேருக்கும் சிறப்பு பூஜையை தொடர்ந்து தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னதாக கொண்டத்து காளியம்மனு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 2 ம் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி, நடக்கிறது. 8 ம் தேதி குண்டம் இறங்குதல், நிகழ்ச்சியும், அன்று மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சியை யொட்டி, பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை இந்து அறநிலைமத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.