பதிவு செய்த நாள்
29
மார்
2025
12:03
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுமார் 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனிஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெர்ச்சி விழா மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 2025 மார்ச் 29ம் தேதி அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளனர்.
இதுக்குறித்து கோவில் நிர்வாகம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றி பாரம்பரிய கணிப்பு முறையின் படி 2026ம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும். வழக்கமாக நடைபெறும், தினசரி பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழாமை மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு பக்தர்கள் அதிகாலையில் சென்னை, சேலம், திருச்சி,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலத்திலிருந்து பக்தர்கள் வருகைப்புரிந்தனர். அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கட்டண தரிசனம், தர்மதரிசனம் என்று அனைத்து பக்தர்களும் வரிசையாக சென்று பகவான் சன்னதி ஒரோ இடத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர் முன்னதாக பக்தர்கள் அதிகாலையிலிருந்து நளன் தீர்த்தத்தில் புனித நீராடி பின்னர் கலிதீர்த்த விநாயகரை தரிசனம் செய்து பின்னர் சீதர்தேங்காய் உடைத்தனர். பின்னர் கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்களது தேஷங்கள் நிறைவேற்றினர் மேலும் பக்தர்களுக்கு கேர்வில் நிர்வாகம் சார்பில் பிஸ்கட், தண்ணீர், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் பாதுகாப்பு நலன்கருதி சீனியர் எஸ்.பி..லட்சுமி செளஜன்யா தலைமையில் எஸ்.பி.சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட போலீசார், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.