Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு அந்தணர்குறிச்சியில் ... அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா; பக்தர்கள் பரவசம் அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
12:04

பழநி; பழநி கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.


பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ் பெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.,5,) முன்மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். அதன் பின் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சள் கொடியில் சூரியன், சந்திரன், வேல், மயில் சேவல்,பாம்பு, தாம்பூலம், மணி, விளக்கு வரையப்பட்ட கொடியை கொடி கம்பத்தின் முன் வைத்து பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பூஜைகள் அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் குழுவினரால் நடந்தது. கொடி ஏற்ற விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா கோசத்துடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழுவினர் பக்தர்கள் கலந்து கொண்டனர். உச்சிக்கால பூஜையில் மலைக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. விழா நாட்களில் வெள்ளிகாமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா,பெரிய தங்கமயில், , தங்க குதிரை, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.‌ ஏப்.,9 மலைக்கோயிலில் திருக்கோயில் சார்பாக தங்க பிரத சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.10., முதல் ஏப்.13 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. 


திருக்கல்யாணம்: திருவிழாவின் ஆறாம் திருநாளான ஏப்.,10 ல் காலை தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு கிரி வீதியில் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை 5:30 மணிக்கு மேல் மாலை 6:30 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 8:30 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டம் சன்னதி வீதி, கிரி வீதிகளில் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம்: ஏப்.,11 ல் மதியம் 12:00 மணிக்கு மேல் மதியம் 1:30 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் கிரிவீதிகளில் நடைபெறும். ஏப்.,14 அன்று மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெறும். அன்று இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா நிறைவடையும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் பங்குனி உத்திர கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar