Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு அந்தணர்குறிச்சியில் ... அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா; பக்தர்கள் பரவசம் அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
12:04

பழநி; பழநி கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.


பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ் பெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.,5,) முன்மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். அதன் பின் கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மஞ்சள் கொடியில் சூரியன், சந்திரன், வேல், மயில் சேவல்,பாம்பு, தாம்பூலம், மணி, விளக்கு வரையப்பட்ட கொடியை கொடி கம்பத்தின் முன் வைத்து பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பூஜைகள் அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் குழுவினரால் நடந்தது. கொடி ஏற்ற விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா கோசத்துடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அறங்காவலர் குழுவினர் பக்தர்கள் கலந்து கொண்டனர். உச்சிக்கால பூஜையில் மலைக் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. விழா நாட்களில் வெள்ளிகாமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா,பெரிய தங்கமயில், , தங்க குதிரை, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.‌ ஏப்.,9 மலைக்கோயிலில் திருக்கோயில் சார்பாக தங்க பிரத சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.10., முதல் ஏப்.13 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. 


திருக்கல்யாணம்: திருவிழாவின் ஆறாம் திருநாளான ஏப்.,10 ல் காலை தந்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு கிரி வீதியில் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை 5:30 மணிக்கு மேல் மாலை 6:30 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 8:30 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டம் சன்னதி வீதி, கிரி வீதிகளில் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம்: ஏப்.,11 ல் மதியம் 12:00 மணிக்கு மேல் மதியம் 1:30 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் கிரிவீதிகளில் நடைபெறும். ஏப்.,14 அன்று மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெறும். அன்று இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா நிறைவடையும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் பங்குனி உத்திர கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar