பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
01:04
கூடலூர்; கூடலூர், புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில் கும்பாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கூடலூர் புத்தூர் வயல் அருகே உள்ள, 600 ஆண்டுகள் பழமையான மகாவிஷ்ணு கோவில், புனரமைப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் 2ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் உச்ச பூஜை நடந்தது. மாலை மஹாதீபாரதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. 3ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன், கலச அபிஷேகம் நடைபெற்றது. 4ம் தேதி முதல் நேற்று வரை தினமும் காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மாலை மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை 3:55 மணிக்கு, கணபதி ஹோமம், முளைபூஜை. மஹா பிம்ப பிரிதிஷ்டை, பாணி, தாணம் சுப பிரிதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்து. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அப்போது இரண்டு கருடன் வானில் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் அதனையும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 11:30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை மஹா தீபாதாரனை திருவிளக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து நாளை முதல் 12 ஆம் தேதி வரை காலை கணபதி ஹோமமும் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, பன்னிரண்டாம் தேதி வரை தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.