Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொட்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ... பங்குனி உத்திர விழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் பங்குனி உத்திர விழா : ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர விழா : முருகன் கோயில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திர விழா : முருகன் கோயில்களில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
05:04

கீழக்கரை; கீழக்கரை அருகே நத்தம் குளபதம் ஊராட்சிக்குட்பட்ட வைகை கிராமத்தில் சேதுபதி மன்னர்களால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்தர விழா நடந்தது. கடந்த ஏப்., 1 காப்பு கட்டுதல் மற்றும் புதியதாக ஸ்தாபனம் செய்யப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.,10 ல் 108 விளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், 9:00 மணிக்கு வன்னி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா நடந்தது. மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை ரமேஷ் குருக்கள் செய்திருந்தார். ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் வசவலிங்கம் மற்றும் வைகை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

* கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட தட்டார் மடத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் 93 வது ஆண்டு பங்குனி உத்தர விழா நடந்தது. கடந்த ஏப்., 3 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இன்று காலை 7:00 மணிக்கு பால்குடம், வேல் காவடி, சிலம்பு காவடி உள்ளிட்டவைகளுடன் கீழக்கரை உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தட்டார் மடம் வந்தடைந்தது. சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்கரை தட்டார் தெரு விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை ... மேலும்
 
temple news
வள்ளிமலை; வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகையையொட்டி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar