Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமண தடையை நீக்கும் சோமநாதேஸ்வரர்
முதல் பக்கம் » துளிகள்
கண் திருஷ்டியை போக்கும் கப்பாலம்மா
எழுத்தின் அளவு:
கண் திருஷ்டியை போக்கும் கப்பாலம்மா

பதிவு செய்த நாள்

15 ஏப்
2025
05:04

ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ‘கப்பாலம்மா’வாக வீற்றிருக்கிறார். புராணங்கள்படி, ‘கப்பாலம்மா அவதாரம் எடுத்த சக்தி, பூலோகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க கப்பாலு வந்தார். இக்கிராமத்திலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பசவேஸ்வரரிடம் அனுமதி பெற்றார். அவரின் அனுமதியை அடுத்து, இங்கே குடி கொண்ட கம்பாலம்மாவுக்கு துணையாக நந்தியும் உடனிருந்தார்’ என்று வரலாறு கூறுகிறது. இக்கோவில் எந்த நுாற்றாண்டை சேர்ந்தது என்ற கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்று அக்கிராமத்தினர் கூறி வருகின்றனர். திராவிட கட்டட கலையை கொண்ட இக்கோவில், 2015ல் சீரமைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.


கோவில் பின்னால், மரத்திலான சிலை இருந்தது. இச்சிலை தற்போது கருவறைக்கு பின், பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு உள்ளது. கோவில் சீரமைக்கப்பட்டபோது, புதிதாக கம்பாலம்மா சிலை வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. அமர்ந்த நிலையில் நந்தி சிலை உள்ளது. கம்பாலம்மாவை தரிசிப்பதால், தங்கள் மீது உள்ள கண் திருஷ்டி போவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவில் தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரையிலும் திறந்திருக்கும். – நமது நிருபர் –

 
மேலும் துளிகள் »
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
பன்ட்வால் தாலுகாவில், விட்லாவின் மாடத்தட்கா என்ற இடத்தில் உள்ள முக்கியமான திருத்தலங்களில், ... மேலும்
 
temple news
பவுர்ணமி விரத வழிபாடு பல எண்ணற்ற பலன்களை தருகிறது. சந்திரன் வழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். உள்ளம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar