திருத்தளிநாதர் திருத்தளிநாதர் கோயிலில் புதிய வாகன வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2025 11:04
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலுக்கு வைகாசி விசாக இரண்டாம் திருநாள் திருவீதி உலாவிற்கு சுவாமி,அம்பாளுக்கு புதிய வாகனங்களுக்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக விழாவில் இரண்டாவது நாள் மண்டகபடிதாரர்களாக வட்டார யாதவ உறவின்முறை அறக்கட்டளையினரால் நடந்து வருகிறது. அதில் இரவில் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா நடைபெறும். அதற்கான மரத்திலான வாகனங்களை மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர். ரூ 4 லட்சம் மதிப்பில் சுவாமிக்கு கற்பகவிருட்சமும், அம்பாளுக்கு காமதேனு வாகனமும் மரசிற்பி மயிலாடுதுறை பன்னீர்தாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டது. நேற்று மாலை திருத்தளிநாதர் கோயில் திருநாள் மண்டபம் அருகில் புதிய வாகனங்களில் கலசங்கள் வைத்து சிவாச்சார்யர்களால் பூஜைகள் நடந்தது. பின்னர் சப்பரத்தில் வாகனங்கள் வைத்து தேரோடும் வீதியில் வலம் வந்தது. தொடர்ந்து வாகனங்கள் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. பக்தர்கள், திருப்பத்தூர் வட்டார யாதவர் உறவின்முறையார் பங்கேற்றனர்.