பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
10:04
சென்னை: திருமலை, திருப்பதிவெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. அவற்றில் வரும், ஜூலை மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. ஆன்லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு இன்று மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. அங்கப்பிரதக்ஷனம் செய்வதற்கான முன்பதிவிற்கு நாளை காலை 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கானமுன்பதிவு வரும், 24ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை 3:00 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கு விடுதிகளுக்கான முன்பதிவு துவங்குகிறது.