பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
04:04
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளுடனும் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மே 7 மாலை 5:00 மணிக்கு புறப்பாடாகிறார். மே 8 அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று மே 10ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெற்று, மே 11ல் திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம் போல் நடை திறப்பு, பூஜை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா, துணை கமிஷனர் சூரியநாராயணன் தெரிவித்தனர்.