Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகண்டேஸ்வரா உண்டியல் வசூல் ரூ.2.59 ... உலக நன்மைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆதிசங்கரர் ஜெயந்தி தினம்! உலக நன்மைக்காக வாழ்க்கையை ...
முதல் பக்கம் » துளிகள்
சாய்பாபா, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்
எழுத்தின் அளவு:
சாய்பாபா, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2025
01:04

பலரும் ஷீரடி சாய்பாபா கோவில் போக வேண்டும் என ஆசைப்பட்டிருப்போம். ஆனால், வேலை, பணம், விடுமுறை கிடைக்காதது போன்ற சில காரணங்களால், செல்ல முடியாத நிலை உருவாகி இருக்கும். அதற்காக, கவலைப்பட வேண்டாம், விக்டோரியா லே – அவுட் பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு சென்று மனம் நிறைவாக வழிபடலாம்.

பெங்களூரு, விக்டோரியா லே அவுட், எல்லகொண்டா பாளையாவில் ஷீரடி சாய்பாபா மற்றும் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இது சாய்பாபா, கிருஷ்ணபகவான் இருவருக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. கோவில் சிறியதாகவும், துாய்மையாகவும் காட்சி அளிக்கிறது. கோவில் சிறியதாக இருந்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.

சாய்பாபா மற்றும் கிருஷ்ணபகவான் இரண்டு பேருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இவர்களை தவிர சாந்தோஷி மாதா மற்றும் மஞ்சுநாத சுவாமிகளுக்கும் சிறிய சன்னிதிகள் உள்ளன. கோவிலில் ஒரு நாளைக்கு மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் உணவு உண்பதற்கான இடம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

பக்தர்கள் பலரும் இறைவனுக்கு பல விதங்களில் காணிக்கை வழங்குகின்றனர். இந்த கோவிலில் அளிக்கப்படும் காணிக்கைக்கு, வருமானவரியில் விலக்கு பெற்று கொள்ளலாம். காலை 5:45 மணி முதல் மதியம் 12:45 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:45 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். வியாழன், ஞாயிறு போன்ற கிழமைகளில் பூஜைக்கு ஏற்ப நேரம் மாறுபடும். கோவிலில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக பலரும் வருகை தருகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar