Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் கோவில்களில் கிருத்திகை விழா ... திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம் திண்டுக்கல் அபிராமி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவக்கம்; 7 கிராம மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவக்கம்; 7 கிராம மக்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஏப்
2025
08:04

உளுந்தூர்பேட்டை; கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் துவக்கமாக 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து வழிபட்டு சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. நேற்று மாலை 4 மணிளவில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இந்த சாகை வார்த்தல் விழாவில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் தேங்காய் உடைத்து தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.  திருவிழா சாகை வார்த்தல் விழாவுடன் துவங்கியது. இன்று(30ம் தேதி) பந்தலடியில் தாலி கட்டுதல் (பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(1ம் தேதி) சந்தனு சரிதம், இரவு 10 மணிக்கு சுவாமி புறப்பாடும், 2ம் தேதி பீஷ்மர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 3 ம் தேதி தர்மர் பிறப்பும் இரவு சுவாமி புறப்பாடும், 4ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 5ம் தேதி பகாசூரம் வதம், இரவு சுவாமி புறப்பாடும், 6ம் தேதி பாஞ்சாலி திருமணமும், இரவு சுவாமி புறப்பாடும், 7 ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 8 ம் தேதி இராஜசுய யாகம், இரவு சுவாமி புறப்பாடும், 9ம் தேதி விராடபர்வம், வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி கிருஷ்ணன் தூது, இரவு சுவாமி புறப்பாடும், 11ம் தேதி காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது. 12ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. , 13ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை தொகுதி மணிக்கண்ணன் எம்..எல்.ஏ., துவக்கி வைக்கிறார். மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி விடையாத்தி, 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar