விழுப்புரம்; சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், திங்கட்கிழமைதோறும், சோமவார பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி இன்று காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ர நாமம் பூஜையும், அதைத்தொடர்ந்து உச்சிகால பூஜை நடந்தது. வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர், பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.