Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போகர் சித்தருக்கு குரு பூஜை; ... சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில்களில் கிருத்திகை காவடி எடுத்து வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில்களில் கிருத்திகை காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 மே
2025
11:05

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், நேற்று கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.


தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உத்சவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில், காலை 9:00 மணிக்கு மூலவருக்கு அலங்காரம் நடந்தது. அருங்குளம் கூட்டுச்சாலையில் சத்திய சாட்சி கந்தன் கோவிலில், மூலவருக்கு மூன்று கால சிறப்பு பூஜைகள் நடந்தன. சிலர் மொட்டை அடித்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


வள்ளிமலை; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை உச்சியில் வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. நேற்று வள்ளிமலை கோவிலில், காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில், காலை 8:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் செங்கல்வராய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar