பதிவு செய்த நாள்
28
மே
2025
10:05
காஞ்சிபுரம்: வசந்த உத்சவத்தின் நான்காம் நாளான நேற்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பச்சை சம்பங்கி மாலை அணிந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் முத்து கிரீடம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காலை கண்ணாடி அறையில் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்தது. தொடர்ந்து ஆறு நாட்களும் இதேபோன்று நடைபெறும் உத்சவத்தில், வரதராஜ பெருமாள் பல்வேறு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். உத்சவத்தின் நான்காம் நாளான நேற்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பச்சை சம்பங்கி மாலை அணிந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் முத்து கிரீடம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்த உத்சவம் நிறைவு நாளான வரும் 30ம் தேதி காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் புறப்பாடாகி வசந்த மண்டபம் வந்தடைவார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தளி மாட வீதி புறப்பாடு நடைபெறும். நிறைவாக அனந்தசரஸ் திருக்குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடைபெறும்.