பதிவு செய்த நாள்
28
மே
2025
04:05
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள தர்மராசர் திருக்கோவில் குண்டம் திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி அணிகலன் எடுத்து வருதல், அனுமன் கொடி எடுத்து வருதல் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தன. வரும், 1ம் தேதி குந்தி அம்மன் அழைத்தல், 3ம் தேதி சக்தி கரகம் அழைத்தல், 4ம் தேதி திருக்கல்யாணம், பாண்டவர்களுக்கு பட்டு சாத்துதல், 5ம் தேதி அரவன் சிரசு, 6ம் தேதி திருவிளக்கு பூஜை, 7ம் தேதி அர்ஜுனன் தபசு, 8ம் தேதி புனித வேள்வியும், தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. 9ம் தேதி சஞ்சீவி நகர் கரகம் அழைத்தல், 10ம் தேதி பழனி கவுண்டன் புதூர் கரகம் அழைத்தல், குண்டம் திறப்பு, குண்டம் வளர்த்தல், கரகங்கள் ஊர் சுற்றி வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 11ம் தேதி காலை, 6:00 மணிக்கு வெண்ணெய் எடுத்து வருதல், 8:00 மணிக்கு குண்டம் இறங்குதல், தொடர்ந்து அன்னதானம், அக்னி பூஜை, அலங்கார பூஜை, மாவிளக்கு நிகழ்ச்சிகளும், 12ம் தேதி பரிவேட்டை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.