Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீவனுார் லட்சுமி நாராயணப்பெருமாள் ... சோழர் காலத்து சிவன் கோவிலில் நீரிழிவை குணமாக்கும் பாலாபிஷேகம் சோழர் காலத்து சிவன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புராதன மிக்க கோயில்கள் பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்துள்ளது; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
புராதன மிக்க கோயில்கள் பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்துள்ளது; பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2025
12:06

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறையின் கீழ் 43,748 கோயில்களும், சமண கோயில்கள் 22, திருமடங்கள் 45 ,திருமடத்துடன் இணைந்த கோயில்கள் 69, அறக்கட்டளைகள் 1263, குறிப்பிட்ட அறக்கட்டளைகள்1130 என மொத்தம் 46,257 கோயில்கள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 1160 கோயில்கள் உள்ளன.

மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை, சிங்கம்புணரி, உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட புராதன கோயில்கள் உள்ள நிலையில் இவற்றில் பெரும்பாலான கோயில்கள் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றால் தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க வேண்டி ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பணியும் நடைபெறவில்லை. இளையான்குடி அருகே கீழநெட்டூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அலங்கார பெருமாள் கோயில் எவ்வித புனரமைப்பு பணியும் செய்யாதநிலையில் கோயில் மண்ணுக்குள் புதையும் நிலை ஏற்பட்டு வருகிறது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், கிராமப் பகுதிகளிலுள்ள புராதனம் மிகுந்த கோயில்களை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களதுகட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். பக்தர்கள் கோயில்களில் ஏதாவது புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டால் அதையும் தடுத்து விடுகின்றனர், என்றனர்.

சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவர் பாண்டித்துரை கூறியதாவது: தமிழகத்தில் அதிகம் வருமானம் வரக்கூடிய கோயில்களையும், மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புராதனம் மிகுந்த கோயில்களை ஹிந்து சமய அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. வருமானம் வருகின்ற கோயில்களில் கூட அடிப்படை வசதி செய்வதில்லை. அந்தந்த கோயில்களில் பாரம்பரியமாக பணி செய்து வரும் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான புராதன கோயில்கள் தற்போது மண்ணோடு மண்ணாக புதைந்து வரும் நிலை உள்ளது. பராமரிப்பில்லாத கோயில்களை மீட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar