பதிவு செய்த நாள்
09
ஜூன்
2025
10:06
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால் குட திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பூ அங்கி அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி 30 நிமிடம் வசந்த உற்சவம் நடக்கிறது.இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் தலையில் சுமந்து வரும் பால், சுவாமிக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்து வருகின்றனர். அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.