Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெங்களூரிலும் ஒரு குருவாயூரப்பா ... 11,000 மாம்பழத்தில்  குமாரசுவாமிக்கு அபிஷேகம் 11,000 மாம்பழத்தில் குமாரசுவாமிக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
சூடாமணியுடன் 400 ஆண்டு ஆஞ்சநேயர் கோவில்
எழுத்தின் அளவு:
சூடாமணியுடன் 400 ஆண்டு ஆஞ்சநேயர் கோவில்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
02:06

பெங்களூரு, பசவனகுடி பகுதியில் அமைந்து உள்ளது ஸ்ரீ காரஞ்சி ஆஞ்சநேயசுவாமி கோவில். இந்த கோவில் 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. 400 ஆண்டுகள் பழமையானது. இது கெம்பேகவுடாவால் புதுப்பிக்கப்பட்டது. இதுகுறித்த கல்வெட்டுகள் எதுவும் கோவில் வளாகத்தில் இல்லை. இந்த கோவில் பெங்களூரில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலின் மூலவராக ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி தன் கால்களை முன்னோக்கியும், இரு கைகளையும் மேலே தூக்கியவாறு உள்ளார். தன் கைகளில் சூடாமணியை ஏந்தி கொண்டு உள்ளார். ஆஞ்சநேயசுவாமியின் சிலை 18 அடி அகலம் கொண்டது. இந்த விக்ரஹத்தை பார்த்தாலே, நமக்கு உற்சாகம் தொற்றி விடும். மறுபுறம் ராமர், சீதா பிராட்டி, லட்சுமணனுடன் காட்சி அளிக்கிறார்.

சூடாமணி

சீதாதேவியை பார்க்க இலங்கைக்கு சென்ற ஆஞ்சநேயர், சீதாவிடமிருந்து சூடாமணியை வாங்கி வந்தார். அதை நினைவு கூறும் வகையில், ஆஞ்சநேயசுவாமியின் கையில் சூடாமணி உள்ளதாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில், ராமர், ஆஞ்சநேயரின் உருவ சிலைகள் சிற்பங்களாக உள்ளன. ஆஞ்சநேயர் இலங்கைக்கு செல்லும் காட்சிகள் போன்றவை ஓவியங்களாகவும் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள், ஆஞ்சநேயரிடம் தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல்களாக வைக்கின்றனர். சுவாமிக்கு பஞ்சாமிர்தம், வெண்ணெய், நெய் அபிஷேகம் ஆகியவை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஹனுமன் ஜெயந்தி, லட்சார்ச்சனை, ராமநவமி ஆகிய நாட்களில் பிரம்மாண்டமாக பூஜை நடக்கும்.

இசை கச்சேரி

குறிப்பாக, ராமநவமி அன்று தெய்வீக இசை கச்சேரி நடக்கும். இதை பார்க்கவும், கேட்கவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். தங்கள் வேண்டுதல்களை முன்னிட்டு அபிஷேகங்கள், விசேஷ பூஜைகளை மேற்கொள்வர். சிறப்பு பூ மாலைகள் அணிவித்து வழிபடுகின்றனர். இக்கோவில் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
பவுர்ணமியன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். சந்திரன் வழிபாடு காலத்தை ... மேலும்
 
temple news
அரளுகுப்பே என்பது துமகூரு மாவட்டம், திப்டூர் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம் ... மேலும்
 
temple news
‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற குருவாயூர் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஹனுமந்தநகர் உள்ள குமாரசுவாமி கோவில் எனும் பொன்மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ... மேலும்
 
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar