வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2025 11:06
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி ஜூன்.3 சாமி சாட்டுதல் அதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று கொடியேற்றம் கிராம தேவதைகளுக்கு பழம் வைத்து வழிபடுதல், அம்மன் அலங்காரப் பெட்டி வானவேடிக்கையுடன் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று அதிகாலை முளைப்பாறியுடன் அம்மன் சன்னதி வந்தவுடன், அக்கினி சட்டி எடுத்தல், மாவிளக்கு, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். நாளை ஜூன் 12 மஞ்சள் நீராட்டுடன் அம்மன் நகர்வலம் வந்து பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை வேம்பார்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.