Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்த தில்லை நடராஜர் பெருமானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவில் நடை திறப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
கைலாசநாதர் கோவில் நடை திறப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2025
03:06

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வடமேற்கே, பிரணவ மலையின் உச்சியில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. கைலாசநாதர் சன்னிதியின் இடது பக்கத்தில், பாலாம்பிகை அம்மனின் தனி சன்னிதி அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது. 

இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், திருமண தடை நீங்கும் என்றும், பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், அங்கு சுவாமியை வழிபட்ட பின், அருகே உள்ள இந்த மலைக்கோவிலுக்கு வருகின்றனர். மலைக்கோவில் நடை காலை 7:30 மணி முதல் 11:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்திருக்கும். சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மலைக்கோவிலுக்குச் செல்லும் போது, காலை 11:00 மணிக்கு மேல் ஆகிறது. அப்போது, நேரம் முடிந்து நடை சாத்தப்படுகிறது. இதனால், 100 படிக்கட்டுகள் ஏறி வந்தும், பக்தர்கள் சுவாமியை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, மலைக்கோவிலில், காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், நடை திறப்பு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளியூர் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஒரே நாளில் பிரதோஷம், சிவராத்திரி வருவது சிறப்பானதாகும். பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய ... மேலும்
 
temple news
கோவை : இந்துக்களாகிய நமக்குள் எப்போதும் பேதங்கள் இருக்கக்கூடாது அனைவரும் ஒன்றே என்ற எண்ணத்தை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ஆனி மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழநி கோயிலில் ஆனி மாத ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 01 ல்   கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar