Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக ... கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் 20 டன் அரிசியில் அன்ன பூஜை கன்னியாகுமரி விவேகானந்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈடு இணையற்ற தேச பக்தி கொண்ட வீரத்துறவி விவேகானந்தர் நினைவு நாள் இன்று!
எழுத்தின் அளவு:
ஈடு இணையற்ற தேச பக்தி கொண்ட வீரத்துறவி விவேகானந்தர் நினைவு நாள் இன்று!

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2025
11:07

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் தத்தா.கல்லுாரியில் தத்துவம் பயின்றவர், இறைவன் குறித்த கேள்விகளுடன் சென்று, ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்; அவரின் போதனைகளை கேட்டு, சீடரானார். ராமகிருஷ்ணரின் மரணத்திற்கு பின், இந்தியாவை உணர்ந்து கொள்ள, நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு, கன்னியாகுமரியில், கடல் நடுவே உள்ள பாறையில், மூன்று நாட்கள் தியானம் செய்தார்.கடந்த, 1893ல், அமெரிக்காவில் நடந்த, உலக மதங்களின் மாநாட்டில், ஹிந்து சார்பாக பங்கேற்றார். சிகாகோவில், அவர் உரையாற்றிய பின், ஹிந்து கருத்துகளுக்கு, உலக அரங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் நிறுவிய, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம், உலகம் முழுதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகின்றன. 1902 ஜூலை, 4ம் தேதி இறைவனடி சேர்ந்தார். வீரத்துறவி விவேகானந்தர் நினைவு தினம் இன்று!

விவேகானந்தர் மறைவதற்கு முன் உலகிற்கு வழங்கிய கடைசி உபதேசம் இது: இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி. உலக வரலாற்றில் சில நாடுகள் சில சமயங்களில் எழுச்சி பெற்றிருக்கும்; உலக வரலாற்றில் சில சமயங்களில் சில நாடுகள் வீழ்ச்சி பெற்றிருக்கும். ஆனால் இந்தியா அமரத்துவம் வாய்ந்த பூமி. இறைவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றும் வாழும்.

சுவாமி விவேகானந்தரின் தேச பக்திக்குள்ள ஓர் ஈடு இணையற்ற தனி சிறப்பு, அவருடைய ஆன்மிக அனுபூதியில் தான், மகத்தான தவ வலிமையில் தான் அடங்கியிருந்தது. அதனால் தான் அவரால் சமயம், சமுதாய துறைகளில் குறிப்பிடத்தக்க நிலையான ஒரு மறுமலர்ச்சியை ஒரே நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது. இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடத்தக்கவர்களாக நாம் பலரை சொல்ல முடியும். ஆனால் அவை இரண்டிலும் குறிப்பிடத்தக்கவர்களாக மகாத்மா காந்திஜியை போல ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். அவர்களில் விவேகானந்தருக்குதான் முதலிடம் உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar