கூடலூர்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் பவுர்ணமி விழாவை முன்னிட்டு சாக்கு சித்தர் பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வீருகண்ணம்மாள் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.