Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் அலங்காரத்தில் சிவபுரி ... அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாவது வெள்ளி பூஜை அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாவது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுாரில் குவிந்த 2 லட்சம் பக்தர்கள்; அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பரவசம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுாரில் குவிந்த 2 லட்சம் பக்தர்கள்; அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பரவசம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2025
04:07

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கி, இரவு 12 மணி வரை நடந்தது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். நேற்று ஆடி அமாவாசை என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவிலில் ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் வந்து விட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன்கோயிலில் கூட கூழ் வார்த்தல் என்பது விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar