திருவையாறு காவிரி கரை புஷ்யமண்டப படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2025 03:08
தஞ்சை ; தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்யமண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடி பூஜை செய்து வழிபட்டனர்
விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படும் இவ்விழா பெண்களின் விழாவாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ய மண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடினர்.பின்னர், காவிரி தாயை போற்றி காப்பரிசி, காதோலை கருகமணி பழங்கள். மாங்கல்யம் இவற்றை வைத்து பூஜை செய்து பெண்கள் சுற்றி வந்து கற்பூரம் காட்டி வழிப்பட்டனர். பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர். பின்னர் மூத்தோர்களிடம் ஆசி பெற்று கொண்ட புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.