திருக்கோவிலூர் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 03:08
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவிலூர், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 9:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, அக்னி காரியங்கள், மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்துள்ள, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை சாக்கை வார்த்தல் வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.