ஆடி கடைசி சோமவாரம்; சிவ வழிபாடு செய்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 10:08
கோவை; ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்த சிவனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், கோவை, சுந்தராபுரம் காமராஜ நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ். 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.