Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலைகள் ... திருப்பதியில் ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் நிறைவு; யாகத்தில் தோன்றிய சிவனின் சூலம்! திருப்பதியில் ஸ்ரீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் கொள்ளையடிக்க வந்து டூவீலரை விட்டு சென்ற திருடர்கள்!
எழுத்தின் அளவு:
ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் கொள்ளையடிக்க வந்து டூவீலரை விட்டு சென்ற திருடர்கள்!

பதிவு செய்த நாள்

20 ஆக
2025
02:08

திருப்புவனம்; திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயில் உண்டியலை கொள்ளையடிக்க வந்த திருடர்கள், பொதுமக்கள் வந்ததால் டூவீலரை விட்டு விட்டு தப்பினர். 


மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டி ஊர்க்காவலன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கிராமத் திருவிழா மற்றும் ஆடித்திருவிழாக்கள் நடந்து முடிந்தன. கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த மூன்று உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவில் புத்தம் புதிய டூவீலரில் வந்த திருடர்கள் இருவர் சுவர் ஏறி குதித்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர். பின் கோயில் அலுவலக அறையை உடைக்க முயன்ற போது ஆட்கள் வரும் சப்தம் கேட்டு சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து நள்ளிரவில் திரண்ட பொதுமக்கள் திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் டூவீலரை கைப்பற்றி திருடர்களை தேடினர். ஆனால் சிக்கவில்லை. புதிய டூவீலரும் வேறு எங்காவது திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோயில் உண்டியலை உடைக்க முயன்ற திருடர்கள் கைலியை வைத்து முக்காடிட்டு உடைத்தது சி.சி.டி.வி., காட்சிகளில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


கிராமமக்கள் கூறுகையில்: உண்டியலில் ஒரு லட்ச ரூபாய் வரை இருந்திருக்க வாய்ப்புண்டு, தங்க நகை பற்றி தெரியவில்லை. ஏற்கனவே இரு முறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் ஒரு சில்வர் உண்டியலை இரும்பு லாக்கர் உண்டியலாக மாற்றி விட்டோம், சில்வர் உண்டியலை உடைத்துதான் திருடியுள்ளனர். ஏற்கனவே நடந்த இரு திருட்டுகளிலும் குற்றவாளிகள் கண்டறிய முடியவில்லை. எனவே இந்த திருட்டிலாவது குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar