ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா ஆக.18 ல் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் எட்டாம் நாளான ஆக 25 ல், விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை காலை 10:00 மணிக்கு நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.