Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.வைரவன்பட்டி ... சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழா; செப்.23ல் துவக்கம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் பிரம்மோத்ஸவ கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்; தூய்மைப் பணி
எழுத்தின் அளவு:
திருப்பதியில் பிரம்மோத்ஸவ கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்; தூய்மைப் பணி

பதிவு செய்த நாள்

16 செப்
2025
10:09

திருப்பதி; திருமலை கோயிலில் பாரம்பரிய கோயில் தூய்மைப் பணியான கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று (16ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


வருடாந்திர பிரம்மோத்ஸவங்களைக் கருத்தில் கொண்டு இந்த தனித்துவமான திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்த்வாரியுடன் முடிகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட நித்ய பூஜைகள் முடிந்த பிறகு, கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் திருமஞ்சன பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


திருமலை கோவிலில் தெலுங்கு உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்களுக்கு முந்தைய ஆண்டு செவ்வாய்கிழமை நடைபெறும். அதன் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தின் சுவர்கள், கூரைகள், தூண்கள் என அனைத்து பகுதிகளிலும் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்பட்டு கோயில் முழுவதும், தெய்வங்கள், பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. முழு நடவடிக்கையும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடந்தது.  மூலவர் கருவறை பட்டு துணியால் மூடப்பட்டு, பச்சைக் கற்பூரம், கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், திருச்சூர்ணம் உள்ளிட்ட மூலிகை கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் செய்யப்பட்டனர். பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை அஸ்ததள பாத பத்மாராதனை, விஐபி இடைவேளையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar