உத்தரகோசமங்கை அருகே பராமரிப்பின்றி வேட்டை மண்டபம்; புனரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2025 10:09
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தை செல்லும் வழியில் ஊரணி கரையோரம் தூண்களுடன் கூடிய வேட்டை மண்டபம் உள்ளது.
300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேட்டை மண்டபம் பராமரிப்பின்றி இடிபாடுகளுடன் உள்ளது. கட்டடத்தின் மேல் தூண்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் அபாயத்துடன் காணப்படுவதால் இதனருகே செல்வதற்கு கூட பொதுமக்கள் அச்சம் காட்டுகின்றனர். பக்தர்கள் கூறியதாவது: நவராத்திரி உற்ஸவ விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு உத்தரகோசமங்கையில் இருந்து மேளதாளங்கள் முழங்க உற்ஸவர் சந்திரசேகர சுவாமி யானை வாகனத்தில் வேட்டை மண்டபத்தின் அருகே வந்து வில்லில் இருந்து அம்பு எய்துவிட்டு பின்னர் கோயிலுக்கு திரும்புவது வழக்கம். எனவே பழமை மாறாமல் வேட்டை மண்டபத்தை வரக்கூடிய தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு செய்ய வேண்டும். மண்டபத்தின் நடுப்பகுதியில் வளர்ந்துள்ள அரசமரம் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எனவே பாரம்பரியமிக்க பழமையான வேட்டை மண்டபத்தை மீட்டெடுத்து மராமத்து பணிகளை செய்ய செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.