திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2025 10:10
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அக். 22முதல் விசாக கொறடு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனித்தீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடைபெற்றது. அக். 26ல் கோயில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நேற்று அக்.27 மாலை 6:00 மணிக்கு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார லீலையும் நடைபெற்றது. கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான இன்று அக். 28 காலையில் சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கிரிவீதி, ரதவீதிகளில் தேரேட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டம் முடிந்தபின்பு கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் விரதத்தை முடித்து வீடுகளுக்கு திரும்புவர். அன்று மாலை 4:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தைல புண்ணியாகவாசனமாகி, தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.