Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்குடியினரின் ‘பூ புத்தரி’ திருவிழா மழையிலும் சிறப்பாக நடந்தது
எழுத்தின் அளவு:
 பழங்குடியினரின் ‘பூ புத்தரி’ திருவிழா மழையிலும் சிறப்பாக நடந்தது

பதிவு செய்த நாள்

28 அக்
2025
12:10

கூடலுார்: கூடலுாரில், பழங்குடியினரின் பாரம்பரியமான நெற்கதிர் அறுவடை திருவிழா, மழையிலும் சிறப்பாக நடந்தது.


நீலகிரி மாவட்டம், கூடலுார் பழங்குடி மக்கள் சார்பில் நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், வனவிலங்குகளால், நெற் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, ஆண்டு தோறும் நெல் அறுவடைக்கு முன்பாக பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழாவை ஐப்பசி மாதம் 10ம் நாள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டு, திருவிழா நேற்று, நடந்தது. இதற்காக, விழா நம்பாலாகோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பழங்குடியினர், அங்கிருந்து புத்தூர்வயல் வந்தனர். அங்குள்ள வயலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பாரம்பரிய இசையுடன் விளக்கேற்றி பூஜையுடன், பூ புத்தரி திருவிழா நடந்தது. இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்த பழங்குடியின ஆண்கள் நெற்கதிர் அறுவடை செய்து, அதனை கட்டுகளாக கட்டி ஊர்வலமாக வட்டப்பாறை பகவதி அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்றனர். அங்கு நெற்கதிர்களுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, கொட்டும் மழையில் சேற்றையும் பொருட்படுத்தாமல் பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.


பூஜை செய்யப்பட்ட நெ ற்கதிர்கள் மங்குழி பகவதி அம்மன் கோயில், புத்தூர்வயல் விஷ்ணு கோவில், தேவாலா வேட்டைக்கொருமகன், நம்பாலாக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.கோவில்களில் நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். விழாவில், பழங்குடியினர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழங்குடியினர் கூறுகையில், நெல் அறுவடைக்கு முன் பாரம்பரியமாக நெற்கதிர் அறுவடை திருவிழா கொண்டாடி வருகின்றனர். அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை கோவில்களுக்கு எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்து விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதன் பின்பே நெல் அறுவடை நடைபெறும். பாரம்பரியமாக நடைப்பெறும் விழாவை, தமிழக முதல்வர் பாரம்பரிய திருவிழாவாக அறிவித்தால் இவ்விழாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar