Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவோண விரதம், கோஷ்டாஷ்டமி; கோ ... 2,600 அடி உயர மலையில் சீனிவாசா கோவில் 2,600 அடி உயர மலையில் சீனிவாசா கோவில்
முதல் பக்கம் » துளிகள்
கிரஹ தோஷங்களை போக்கும் மைசூரு நவக்கிரஹ கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2025
12:10

ஜாதகத்தில் கிரஹதோஷங்கள் இருந்தால் மனிதர்களின் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். நவக்கிரஹங்களை சுற்றி, பரிகாரம் செய்து கொள்வர். மைசூரில் நவக்கிரஹ கோவில் அமைந்துள்ளது. இங்கு பரிகாரம் தேடி, தினமும் அதிக எண்ணிக்கையில், பக்தர்கள் வருகின்றனர்.


மைசூரு நகரின் கே.என்.அக்ரஹாராவில் புராதன நவக்கிரஹ கோவிலை, 1920ல் அரச வம்சத்தின் ராமச்சந்திர ராஜா கட்டியதாக, வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஹொய்சாளர் பாணியில் அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. சிறப்பான கட்டட கலையை காணலாம். கோவிலுக்குள் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் ராகு, கேது, சனி தோஷங்களை நிவர்த்தி செய்கிறது.


கிரஹ தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். எனவே, மைசூரு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். இங்கு வந்து பூஜை செய்தால் உடல் ஆரோக்கியம் விருத்தியாவதுடன், வாழ்க்கையில் அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.


கோவிலுக்குள் ராமாயணம், மஹாபாரதம் சம்பந்தப்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உள்ளே இருக்கும் ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால் கோவிலில், ‘பாசிட்டிவ் எனர்ஜி’ நிறைந்துள்ளது. இங்கு வந்து தரிசனம் செய்தால் நன்மைகள் நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


எப்படி செல்வது?

மைசூரின், என்.ஆர்.அக்ரஹாராவில் நவக்கிரஹ கோவில் அமைந்துள்ளது. மைசூரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கோவிலுக்கு அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வெளியூரில் இருந்து பஸ் அல்லது ரயிலில் வரும் பக்தர்கள், மைசூரு நகர பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனங்களில் கோவிலுக்கு செல்லலாம்.

தரிசன நேரம் காலை 6:00 முதல் 11:00 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை.

தொடர்பு எண் 81068 77592

அருகில் உள்ள கோவில்கள் கணபதி கோவில், நவக்கிரஹ விருக்‌ஷா கோவில்.


 
மேலும் துளிகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ராமரின் சொல்லை கேட்டு, ஏழு கிராம மக்களின் தெய்வமாக ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். ஆம்... விஜயபுரா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar