Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் 33 ... சந்திரமவுலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை சந்திரமவுலீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

03 நவ
2025
04:11

தஞ்சாவூர்; காவிரி தென்கரையில் உள்ள தளங்களில் 26-வது தலமாக ஆதிகும்பேஸ்வர சாமி கோவில் உள்ளது. உலகம் தோன்றுவதற்கு ஆதி காரணமாக விளங்கும் பராபரம் கும்பத்தில் இருந்து கோவில் தோன்றியதால் இக்கோவிலுக்கு ஆதி கும்பேஸ்வர சாமி கோவில் என பெயர் வந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் போற்றப்படும் மகாமக பெருவிழா ஆதி கும்பேஸ்வரர் சாமி கோவிலில் தொடர்புடைய விழாவாகும். மந்திரபீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதிகும்பேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 


இதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய, முடிவு செய்யப்பட்டு, ஹிந்துசமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் சார்பிலும், அறங்காவலர்கள் குழு சார்பிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும்  டிசம்பர் மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் இருந்த கொடிமரம் சேதமடைந்ததால், புதிய கொடி மரம் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரே தேக்கு மரம் லாரியில் கொண்டு வரப்பட்டது. பணியாளர்கள் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று கோவிலில் பூர்வாங்க பூஜைகள் முடிந்த பிறகு, புதியதாக செய்யப்பட்ட கொடிமரம்  பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இரும்பு கொடிமரம் சேதம் அடையாமல் இருக்க உலோகத்தினால் செய்யப்பட்ட தகடு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar