Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் மேற்கு வங்க ... கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் 33 அடி உயர கொடி மரத்திற்கு பாலாலயம்
எழுத்தின் அளவு:
கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் 33 அடி உயர கொடி மரத்திற்கு பாலாலயம்

பதிவு செய்த நாள்

03 நவ
2025
04:11

கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் கொடி மரத்திற்கு இன்று பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


கம்பராயப்பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில் மிக பழமையும் வரலாற்று சிறப்பு பெற்றது. இங்கு தனித் தனி சன்னதிகளில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ளனர். கிரீடம் இல்லாத ஆஞ்சநேயர், கமண்டலத்துடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி , சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு பின் நான்கு கைகளில் சக்கரங்களுடன் நரசிம்மர் இருப்பது சிறப்பாகும். மும்மூர்த்தி தலம் என்றும், பிரம்மா இங்கு வன்னி மர வடிவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இங்குள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 2003 ல் நடந்தது. அதன் பின் 22 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணி, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். திருப்பணி,கும்பாபிஷேகம் நடத்த எம்.எல் ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்பம் இராமலிங்கம்பிள்ளை டிரஸ்ட் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் பாஸ்கர் பெரும்பாலான திருப்பணிகளை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் செய்துள்ளார்.


இன்று காலை 33 அடி உயர கொடிக்கம்பத்திற்கு பாலாலயம் நடந்தது.முன்னதாக கொடி மரத்திலிருந்து சக்தி கும்பத்தில் இறக்கி, பின் யாகசாலை ஹோமங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து கொடி மர கவசத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், செயல் அலுவலர் பொன்முடி மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர். நவ . 10 ல் முகூர்த்தகால், நவ . 28 முதல் யாக வேள்விகள், டிச. முதல் தேதி காலை 6:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகள் திவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar