Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: குரு பார்க்கிறார்..கோடியைத் ... கன்னி: சிந்தித்து செயல்படுக! சிகரத்தை தொடலாம்! கன்னி: சிந்தித்து செயல்படுக! ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
சிம்மம்: ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
03:12

எண்ணத்திலும் செயலிலும்  உறுதி மிக்க சிம்மராசி அன்பர்களே!

புத்தாண்டில் சனி, ராகு உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் மிகுந்த அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். இதனால் உங்கள் செயல்களில் நேர்த்தியும் தகுந்த வெற்றியும் கிடைக்கும். சனி, ராகுவின் அனுகூலம் வருடம் முழுவதிலும் உள்ளது. குரு மே 28ல் பெயர்ச்சியாகி மிதுனத்தில் அமர்ந்து தன் பங்கிற்கு ஆதாய பலன்களைத் தருகிறார்.திட்டமிட்ட செயல்களை செயல்படுத்தி சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். பசு, பால் பாக்ய யோகம் அமையும். குடும்பத்தின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். வீடு, வாகனத்தில் வருட முற்பகுதியில் குருவின் பார்வை பலத்தால் அபிவிருத்தி பணிகளை திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். தாய்வழி சொந்தங்களின் ஆதரவு பலமாக கிடைக்கும்.புத்திரர்களின் வாழ்வில் நல்ல குணங்களை பின்பற்றி படிப்பு, செயல்திறனில் முன்னேற சனி, ராகு, குருவின் பார்வை பலம் பெரிதும் உதவும். வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கப் பெறுவர். பூர்வ சொத்தில் தாராள வருமானம் கிடைக்கும். புதிதாகச் சொத்து சேர்க்கையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை உண்டாகும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு எதிரிகளே தானாகப் பயந்து விலகுவர். பழைய கடன் பெருமளவு அடைபடும். எதிர்கால நன்மை கருதி சேமிக்கவும் செய்வீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்ப ஒற்றுமைக்கு பலம் சேர்த்திடுவர். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். நண்பர்களுக்கு உதவுவதும் உதவி பெறுவதுமான வாய்ப்புண்டு. தந்தைவழி உறவினர்களிடம் இணக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சிப்பவர்களுக்கு அதிர்ஷ்டகரமான காலகட்டம்.

தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு லாபம் குவிப்பர். நிர்வாகச்செலவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகும். திறமைமிகு பணியாளர்களுக்கு ஊக்கமும் சலுகையும் வழங்குவீர்கள். வங்கி நிதியுதவியுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் கூட்டமைப்பில் சிலருக்கு பதவி, பொறுப்பு கிடைக்கும். புதிய தொழில் துவங்குகிற முயற்சியும் இந்த ஆண்டு நிறைவேறும்.

வியாபாரிகள்: கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி விற்பனையைப் பெருக்குவர். தாராள விற்பனையால் வருமானம் உயரும். விரிவாக்கப் பணிக்கு எதிர்பார்த்தபடி வங்கியில் நிதியுதவி கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. சகவியாபாரிகளின் மத்தியில் கவுரவத்துடன் திகழ்வர். வாடிக்கையாளர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பிரயாணம் அடிக்கடி சென்று வர நேரிடும்.

பணியாளர்கள்:  அரசு, தனியார் துறை பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவர். பணி இலக்கை எளிதாக நிறைவேற்றி நிர்வாகத்தினரின் பாராட்டு கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை படிப்படியாகக் கிடைக்கும். பணிச்சுமையை சில சமயங்களில் சந்தித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. சக பணியாளர் ஒத்துழைப்பு சீராகக் கிடைக்கும். தொழில்நுட்ப பணியாளர்கள் புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொள்வர். எதிர்பார்த்த பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.

பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். தாமதமான சலுகை திருப்திகரமாக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெற்றுத் திகழ்வர். தாராள பணவசதியால் குடும்ப வாழ்வில் சந்தோஷம் காண்பர். கணவர்வழி சார்ந்த உறவினர்களிடம் நற்பெயர் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்னை அதிகரித்து உபரி வருமானம் பெறுவர். தொழிலுக்குத் தேவையான நவீன கருவிகள் வாங்குகிற திட்டம் நிறைவேறும்.

மாணவர்கள்:  லட்சிய மனதுடன் படித்து தேர்ச்சி இலக்கை அடைவீர்கள்.படிப்புச் செலவுக்கான பணம் தாராள அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் முன்னேற்றத்திற்கு துணைநிற்பர். பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் செயல் படுவீர்கள். கல்வியோடு விளையாட்டு, கலைத்துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். படித்து முடித்து வேலைதேடுபவர்களுக்கு இது பொன்னான காலகட்டம். நல்ல சம்பளத்தில் கவுரவமான பணி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:  மக்கள் சேவையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் பெறுவர். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவகார பேச்சு வார்த்தையில் அனுகூல பலன் கிடைக்கும். எதிரி வியப்படையும் வகையில் வாழ்வு உயரும். புத்திரர் உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்படுவர். ஓய்வு நேரங்களை குடும்பத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்துவீர்கள்.

விவசாயிகள்:  பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் குறித்த காலத்தில் கிடைக்கும். பயிர் விளைச்சல் சிறந்து அதிக மகசூல் பெறுவீர்கள். விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தி உண்டாகும். நவீன உழவுக்கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும் . நிலப்பிரச்னை தீர்ந்து விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் தொழிலில் அமோக லாபம் கிடைக்கும்.

பரிகாரப் பாடல்:
உலகம் உண்ட பெருவாயா!
உவப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி
நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற
திருவேங்கடத்து எம்பெருமானே!
குலத் தொல்லடியேன்
உன்பாதம் கூடுமாறு கூறாயே!

ஜனவரி: சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று இருப்பதால் அனுகூலம் உண்டு. ராகுவும், சுக்கிரனும் நன்மையை வழங்க காத்திருக்கின்றனர். குருபலம் இல்லை என்பதையும் மறுப்பதற்கு இல்லை. தொழிலில் வருமானம் சீராகும். ஆரோக்கியம் மேம்படும்.

பிப்ரவரி:அரசாங்க வகையில் அனுகூலம் உண்டு. சனி அருளால் தொழிலில் ஆதாயம் கூடும். கணவன் அல்லது மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செவ்வாயின் பாதிப்பால் மனதில் அவ்வப்போது மனசஞ்சலம் உண்டாகும்.

மார்ச்: செவ்வாய், சூரியன், புதன், சுக்கிரன் நான்கு கிரகங்களும் சரியில்லை. வாகனத்தில் செல்லும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. குரு 10ல் இருப்பது தொழிலில் சிரமத்தை ஏற்படுத்தும். உடல்நலம் பாதிப்படையும்.

ஏப்ரல்: சுக்கிரன், சனி,ராகு மூன்றாலும் நன்மை உண்டு. வங்கிக் கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் தடைபல உண்டாகி விலகும். சனி, சூரியனின் பார்வையால் உடல்நிலை சுமாராகவே இருக்கும்.

மே: மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் 10ம் இடம் செல்வது சிறப்பானதாகும். புதனாலும் நன்மையே. தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். எதிலும் சாதுர்யமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வெளிநாட்டு யோகமும் உண்டு.

ஜூன்: வருஷ கிரகங்களான குரு,சனி, ராகு மூவரும் அனுகூலம் தரும் விதத்தில் சஞ்சரிக்கின்றனர். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை திருப்தி தரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நல்ல முறையில் நடத்தி முடிக்கலாம்.

ஜூலை: பொன்னான காலகட்டம் இதுவாகும். அசையாச் சொத்துக்களை வாங்க வாய்ப்புண்டு. ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழலாம். சூரியன் 11ல் இருப்பது பொன்னான காலகட்டம். அரசியல்வாதிகள் வாரிசுகளை அரசியலில் புகுத்தி மகிழ்வர்.

ஆகஸ்ட்: மனக்குழப்பம் அனைத்தும் நீங்கி தெளிவு உண்டாகும். திருமண முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். விரோதியும் நட்பு பாராட்ட வேண்டிவரும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும்.

செப்டம்பர்: உடல்நலனில் அக்கறை தேவைப்படும். உஷ்ணவியாதிகள் ஏற்படலாம். தொழிலில் அவசரமுடிவைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்களிடம் அதிக நெருக்கம் கூடாது.

அக்டோபர்: சூரியனின் சஞ்சாரம் நன்மை அளிக்கும். சுக்கிரன்,குருவும் ஆதாயம் வழங்க காத்திருக்கின்றனர். திருத்தல யாத்திரை, புண்ணிய காரியங்களைச் செய்ய ஏற்ற காலகட்டம்.  பயணங்கள்  அடிக்கடி ஏற்படும். தொழிலில் லாபம் கூடும்.

நவம்பர்: குரு வக்ரம் பெறுவதால் சிரமம் கூடும். தொழிலில் தடை பல உண்டாகி மறையும். பதவிக்கு ஆபத்து நேரலாம் கவனம். திருமண முயற்சியில் அதிருப்தி நிலவும். பணப்புழக்கம் சுமார் தான். வியாபாரத்தில் சோதனையைச் சந்திக்க இடமுண்டு.

டிசம்பர்: வக்ரகுரு, செவ்வாயின் அமைப்பு அனுகூலத்தை தராது. மனதில் குழப்பம் மேலோங்கும். எதிரிகளாலும் தொல்லை உண்டாகும். வாகனத்தில் நிதானமாகச் செல்வது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. பேச்சில் கடுமை கூடவே கூடாது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar